இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஐந்தாண்டு நினைவில் அவரும் இசைஞானி இளையராஜாவும் இணைந்த ஒரு பாடல்.
அம்மன் கோயில் கொண்டாட்டக் களத்திலே கூட்டுக்குரல்கள் குலவை ஓசைக்கு வந்தமைகின்றார்கள்.
அம்மன் பாட்டுக்கே உரிய துள்ளலும், இடையே மெது நடையுமாகப் பயணிக்கும்.
T.S.ராகவேந்தர், சண்முகசுந்தரி, பெரிய கருப்பத்தேவர் என்ற மூத்த பாடகர்களோடு பவதாரணியும் சேர்ந்த பாட்டு இது.
இரண்டு நாயகர்கள் வித்தியாசமான தோற்றத்தில் நடித்த படமிது. இந்தப் பாடல் அதிகம் போய்ச் சேராவிட்டாலும் இன்னும் கொண்டாட வேண்டிய பாட்டு என்பதால் இந்தப் போட்டி வழியாக ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.
கொடி ஏத்தி வைப்போம் – பிதாமகன்