இசையரசி பி.சுசீலா பாடும் இனிய பாடல் கங்கை அமரன் வரிகளில் தென்றலாக வீசுகின்றது.
கை கூடாத காதல் சுமையோடு, தன்னைத் தேடி வருபவனைக் கைப் பிடிப்பவள் தன் வாழ்க்கைப் பாடத்தைப் படிக்கத் தொடங்கும் போது எழும் ஆர்ப்பரிப்பாக இந்தப் பாடலின் முன் மிதப்பில் எழும் கோரஸ் குரல்கள். வெறும் வாய் ஜாலமே என்று ஒதுக்க முடியாதவாறு இந்தக் குரல்களின் கூட்டணியோடு வயலின் குழுவும் சேரும் போது பிரித்தே பார்க்க முடியாத ஒத்திசைவு வருகின்றது.
இந்த மாதிரியான பாடல்களைக் காட்சிச் சூழலோடு பொருத்திப் பார்க்கும் போது இளையராஜாவின் தேவை உணரப்பட்டு நெஞ்சை அள்ளும்.
ஏ தென்றலே இனி நாளும் – நெஞ்சத்தை கிள்ளாதே