#RajaChorusQuiz 69 எஸ்பிபி வாரம் – பாட்டு ஒன்று

பாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது நினைவு நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளை அவ் இறவாப் பாடகரை நினைவு கூரும் வாரமாக இன்றைய நாள் முதல் வரும் சனிக்கிழமை வரை அவரது பாடல்களோடு போட்டி இடம்பெறுகின்றது.

முதலில் இடம்பெறுவது எஸ்பிபி அவர்களது துள்ளிசைக் குரலோடு கோரஸ் கூட்டமும் இணைந்து போட்டும் கொட்டம். இந்தப் படத்தில் இரண்டு துள்ளிசைப் பாடல்களும் உச்சம் கொண்டவை. கமல்ஹாசனுக்கான அளவான குரல் இங்கே மேடைப் பாட்டுக்கும் கை கொடுக்குமாற் போல இருக்கும்.

பாடலை எழுதியவர் வைரமுத்து. உங்களுக்குள் இருப்பவரைத் தட்டி எழுப்புங்கள் எங்கே எந்தன் பாடல் என்று.

எங்கே எந்தன் காதலி – எனக்குள் ஒருவன்

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 68 ஏதோ ஒரு பாட்டு

இன்று வரும் பாடலை பி.சுசீலா & எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருடன் குழுவினருடன் பாடுகிறார்கள்.

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் இனிமையானதொரு பாட்டு. இந்தப் படம் தமிழகத்தின் அரசியலிலும் புரட்சி பண்ணிய முக்கிய நாயகி ஒருவரின் இறுதிப் படமாகக் கருதப்படுகிறது.

கடல்லயே இல்லையாம்னு சொல்லாமல் பதிலோடு வருக

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் – நதியைத் தேடி வந்த கடல்

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 67 பாட்டுக் கூட்டம்

இசைஞானி இளையராஜாவே எழுதி இசையமைத்த பாட்டு இது.

மனோ, சித்ராவுடன் குழுவினர் இணையும் ஒரு அழகான கூட்டப் பாட்டு. அந்த மக்களின் வாழ்வியலோடு கலந்து போகும் பாட்டுக்குள் எள்ளல் செய்ய இந்த நாயகனுக்கு எப்படித் தான் மனசு வந்ததோ 🙂


யாரும் விளையாடும் தோட்டம் – நாடோடி தென்றல்

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 66 பிள்ளை மொழி

இன்றைய பாடலை மனோ & அருண்மொழி குழுவினருடன் பாடுகிறார்கள். ஒரு குழந்தைப் பாடலை இவ்வளவு அழகாகவும் தன்னால் கொடுக்க முடியும் என்று கங்கை அமரன் காட்டியிருக்கிறார் அவ்வளவு அழகுணர்ச்சி நிறைந்த பாட்டு.

அம்மாவைத் தேடினால் பிள்ளைப் பாட்டுக் கிட்டும், வாருங்கள் பதிலோடு.

ஒரு முத்துக்கிளி கத்தும் மொழி புத்தம் புது தத்தை மொழியே – தாயம்மா

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 65 போவோமா ஊர்கோலம்

கவிஞர் முத்துலிங்கம் அவர்களை நான் வானொலிப்பேட்டி எடுத்தபோது இங்கே பகிர்ந்த பாடலைப் பாடிக் காட்டுமளவுக்கு அவருக்குப் புகழ் கொடுத்த பாடல் ஒன்று. இப்படத்தின் கதாநாயகனுக்கு முத்துலிங்கம் அதிக அளவில் பாடல்களை எழுதியிருக்கிறார். தந்தன தந்தன என்று வருகின்ற சந்தத்தை ராஜா எப்படியெல்லாம் மாறுபட்டுக் கையாண்டிருக்கின்றார் என்பதற்கு இது இன்னொரு உதாரணணணணணம் 🙂

உமா ரமணனுடன் இன்னொரு முன்னணிப் பாடகரும், கோரஸ் கோஷ்டியுமாக இந்தப் பாட்டு.

பூபாளம் இசைக்கும் – தூறல் நின்னு போச்சு

Posted in Uncategorized | 48 Comments