இன்று இடம்பெறும் பாடல் கிராமியம் என்றால் அதில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகியோடு ஜோடி கட்டிப் பாடும் பாட்டு. கங்கை அமரன் வரிகளில் இந்தப் பாட்டு செந்தூரப் பூவேக்குப் பின் இன்னொரு பூவை முதலடியாகக் கொண்ட பாட்டு.
இயக்குநர் ஒருவரே அரிதாரம் பூசிய படம் ஆனால் அவர் நேரடி இயக்கம் அல்ல, நம்ம இசைஞானி சந்தனமும் ஜவ்வாதுமாகக் கொடுத்த பாடல்களே படத்தை இசை மணக்கச் செய்தன.
கல் மனசுக்காரராக இல்லாமல் ஈரமுள்ள இதயத்தோடு பாடலைத் தேடுங்கள்.
நாற்றாக ஊனி வச்சேன் / கொத்தமல்லிப் பூவே புத்தம் புதுக் காத்தே – கல்லுக்குள் ஈரம்