#RajaChorusQuiz 406 வன்மம் கொண்டு துன்பம் தந்து

இன்று இடம்பெறும் பாடல் மிகவும் ஆக்ரோஷமான பாடல்,  மலேசியா வாசுதேவன், குழுவினர் பாடுகின்றனர்.

இதே படத்தில் தென்றல் மாதிரி வருடும் பாடல் இருக்கும் போது அதற்கு முற்றிலும் மாறுபட்டு உக்கிரமாக வெளிப்படுகிறது இந்தப் பாடல். அதிகம் கவனிக்கப்படவில்லையோ என்ற ஆதங்கமும் எழும் வகையில் படத்தின் சூழலுக்கேற்ப பொருந்திப் போன பாட்டு.

இப்படியானதொரு பாடலுக்கு கோரஸ் குரல்களின் பாவனை எவ்வளவு தூரம் முக்கியமானது என்று பாடமெடுக்கிறார் ராஜா. அவ்வளவு தூரம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஆற்றாமையையும், சோகத்தையும் இந்தக் கூட்டுக் குரல்கள் திரட்டிக் கொடுக்கின்றன.

நாயகனே இயக்குநராகவும் தன்னை இயக்கிய படம்.

தொன்று தொட்டு இன்று வரை ஏழை என்னும் ஜென்மத்துக்கு துன்பம் ஐயா – அவதாரம்

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 405 பிள்ளைக்காகத் தாளம் தட்டு

எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினருடன் பாடும் பாடல்.

கவிஞர் வாலியின் வரிகள்.

முரளி நடித்த இந்தப் படத்துக்கு மேலதிக க்ளூ கேட்பதெல்லாம் தர்மம் ஆகுமா?

தகதோம் தானதந்தம் / இந்திரன் போலே சந்திரன் போலே – அதர்மம்

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 404 நாட்டில் இல்லாத பெண்களா

எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

விளையாட்டு ஒன்றோடு சம்பந்தப்படுத்திய படத் தலைப்பு. ஆனால் படத்தின் கதையோட்டத்தில் பொருத்தமில்லாமல் வந்து விழும் பாட்டு, எழுதியவர் கங்கை அமரன்.

எத்தனையோ கன்னிப் பொண்ணு – ஜல்லிக் கட்டு

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 403 ஆடி வா

கங்கை அமரன் வரிகளில் இளையராஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

இதுக்கெல்லாம் விசாரணைக்கமிஷன் வச்சா பதில் கண்டு பிடிப்பார்கள்?

இதுதான் இதுக்குத்தான் – புலன் விசாரணை

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 402 தேவன் கோயில் மலரே

கவிஞர் வாலியின் வரிகளில் ஒரு பெண் பாடகியோடு குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

அந்தப் பெண் பாடகிக்கும் படத்தின் தலைப்புக்கும் பெரிய சம்பந்தம் இருக்கே.

கடவுள் உள்ளமே – அன்புள்ள ரஜினிகாந்த்

Posted in Uncategorized | 42 Comments