தினத்தந்தியின் வரும் நீஈஈஈஈஈண்ட தொடரோடு படத்தின் தலைப்பு சம்பந்தப்பட்டிருக்கும்.
பஞ்சு அருணாசலம் அவர்களில் வரிகளுக்கு எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.
இது ஒரு புது வித அதிசயம் / கண்டதை சொல்லாதே நான் சொன்னதை சொல்லாதே – கன்னித்தீவு
தினத்தந்தியின் வரும் நீஈஈஈஈஈண்ட தொடரோடு படத்தின் தலைப்பு சம்பந்தப்பட்டிருக்கும்.
பஞ்சு அருணாசலம் அவர்களில் வரிகளுக்கு எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.
இது ஒரு புது வித அதிசயம் / கண்டதை சொல்லாதே நான் சொன்னதை சொல்லாதே – கன்னித்தீவு
விஜயசாந்தி அதிரடி நாயகியாக தெலுங்கு சினிமாவில் வலம் வர முன்னர் தமிழில் நடித்த படங்களில் ஒன்று.
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர் பாடும் துள்ளிசைப்பாடல் இது.
பாடலோடு வருக.
பூக்கள் சிந்துங்கள்.. கொஞ்சும் – நிழல் தேடும் நெஞ்சங்கள்
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து இன்றைய பாடல்.
படத்தின் தலைப்பை யோசித்தால் இன்றைய நாளைப் பொருத்தினால் க்ளூ ஆகி விடுமே
எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.
புத்தாண்டு பூத்தது இன்று – ஜனவரி 1
பிரபல நகைச்சுவை நடிகர் நாயகனாக நடித்த படத்தில் இருந்து ஒரு பாடல் இன்று. இசைஞானியோடு நெருங்கிய தலைப்பு.
மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா, குழுவினர் பாடுகிறார்கள்.
பாடலோடு வருக.
ஊரு விட்டு ஊரு வந்து – ராஜா எங்க ராஜா
நடிகை லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்த “ஒரு” திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல்.
இந்தப் படத்தின் கதை, வசனம் எழுதியவர் கவிஞர் வாலி.
மலேசியா வாசுதேவன், குழுவினர் ஜாதிக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்குமாற் போல அமைந்த வரிகள்.
பாடலோடு வருக.
ஜாதி என்னடா – ஒரே ஒரு கிராமத்திலே