
இசைஞானி இளையராஜாவின் கூட்டுக் குரல் பாடல்களின் அணிவகுப்பாய் அமைந்த போட்டி நிகழ்ச்சி இன்றோடு நிறைவை நாடுகின்றது.
இத்தனை நாட்களும் தொடர்ந்து இந்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். கடந்த 400 போட்டிகளுக்கான வெற்றியாளர்களை ஒட்டுமொத்தப் போட்டிகளின் அடிப்படையில், அதாவது 500 போட்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பரிசுகள் பின்னர் வழங்கப்படும்.
ஒரு சிறு இடைவேளையின் பின்னர் புதிய போட்டி, புதிய சுற்று குறித்த அறிவிப்பு வெளியாகும்.
இன்றைய போட்டிப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இளையராஜாவும் மற்றும் கூட்டுக் குரலுமாகப் பாடி நிறைவு செய்கிறார்கள்.
சத்யராஜ் நடித்த படமிது.
சோழர் குல குந்தவை போல் – உடன் பிறப்பு