#RajaMusicQuiz 27 ராமனின் மகிமை

இன்று வெறும் எட்டே விநாடிகள் ஒலிக்கும் இந்த இசைத் துணுக்கு ஒரு பாடலின் சரணத்தில் 5 இடங்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த ஆலாபனையின் தொகுப்பாகப் பகிர்கிறேன்.

இந்தப் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட படமாகும். எஸ்.பி.சைலஜா & குழுவினருடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடலின் தமிழ் வடிவம் வைரமுத்துவின் கைவண்ணம். முத்தான பாடல்கள் கொண்ட படம்.

எஸ்பிபியின் தந்தை ஒரு கதாகாலட்சேபம் செய்தவர், மகனும் ஒரு பாடலில் இவ்விதம் கதாகாலட்சேபம் செய்யும் பேறு தான் என் சொல்வது.

ராமன் கதை கேளுங்கள் – சிப்பிக்குள் முத்து

Posted in Uncategorized | 54 Comments

#RajaMusicQuiz 26 அலைகள் ஓய்வதில்லை

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் ஆலாபனையில் அமைந்த அழகிய பாடல் இது.

அன்போடு படத்தைத் தேடினால் பூ மாதிரிப் பதில் கிட்டும்.

அலை மீது தடுமாறுதே – அன்புள்ள மலரே

Posted in Uncategorized | 48 Comments

RajaMusicQuiz 25 புல்லாங்குழலோன் சுதாகருக்குப் பிரியாவிடை

இன்று மறைந்த புல்லாங்குழல் வாத்திய விற்பன்னர் சுதாகர் அவர்களது மறைவில் அவருக்குப் பிரியாவிடை கொடுக்கும் பாடலாக இன்றைய புதிர் அமைகின்றது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

சுதாகர் அவர்களின் குழலிசையோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் இந்தப் பாடலின் வரிகள் கவிஞர் வாலி. கீரவாணி ராகத்தில் அமைந்த அதியற்புதமான பாடல். மோகனின் படங்களில் ஒன்று.

மலையோரம் வீசும் காத்து – பாடு நிலாவே

Posted in Uncategorized | 58 Comments

#RajaMusicQuiz 24 ஆடல் கண்டேன்

கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்.

ஶ்ரீதேவி நடித்த இந்தப் படத்தின் பாடலை கே.ஜே.ஜேசுதாஸுடன் ஆலாபனைக் குரலாக சசிரேகா. எல்.பி ரெக்கார்டில் இந்தப் பெண் குரலை எஸ்.பி.சைலஜா என்று பதிந்திருக்கிறார்கள்.

கூந்தலிலே மேகம் வந்து – பாலநாகம்மா

Posted in Uncategorized | 51 Comments

#RajaMusicQuiz 23 பிள்ளை எனும் வீணை

ஆர்.வி.உதயகுமார் பாடல் வரிகளில் அமைந்த பாடல், ஆனால் அவர் இயக்காத படம் இது.

பிரபு ஒரு வேடத்தில் போலீஸ் ஆக நடித்த படம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் பாடலிது.

கிண்ணாரம் கிண்ணாரம் கேட்குது கேட்குது – தர்மசீலன்

Posted in Uncategorized | 40 Comments