#RajaChorusQuiz 387 சக்தியைப் போற்றி – இரண்டாம் நாள்

நவராத்திரி நாட்களில் இரண்டாவது நாளாக அமையும் இன்றைய நாளில் சரஸ்வதி தேவியைப் போற்றிப் பாடும் பாடல் இது. கவிஞர் வாலியின் வரிகளில் பாம்பே ஜெயஶ்ரீ குழுவினர் பாடுகின்றார்கள்.

உயிர் மெய் எழுத்துகளில் ஒன்று இந்தப் பாடல் இடம்பெறும் படத்தின் தலைப்பின் ஆரம்ப எழுத்தாக அமைகின்றது.
படத்தின் பெயரை இடப்பெயர் என்ற வகுப்புக்குள்ளும் அடக்கலாம்.தலைப்பில் ஒரு பாதி ஒரு நாட்டின் பெயராக இருக்கின்றது.

பாடலோடு வருக

கை வீணையை ஏந்தும் கலைவாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே – வியட்நாம் காலனி

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 386 சக்தியைப் போற்றி – முதலாம் நாள்

இன்று முதல் நவராத்திரி காலம் ஆரம்பமாகின்றது.

கல்விக்கு சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு இலக்குமி தேவியையும், வீரத்துக்கு காளி தேவியையும் என்று மூன்று செல்வங்களை வேண்டிப் போற்றிப் பணியும் இந்த நாட்களில் சற்று விசேஷமாக நாமும் கோரஸ் போட்டிகளினூடாகச் சக்தியைப் போற்றும் பாடல்களில் கோரஸ் பாடகர்களின் பங்களிப்போடு களம் இறங்குகிறோம்.

கவிஞர் வாலியின் வரிகளில் T.N.சேஷகோபாலன் குழுவினர் பாடுகிறார்கள்.

இன்றைய பாடல் உயிர் எழுத்துகளில் நெடில் வகைக்குள் அடங்கும் ஒரு எழுத்தை ஆரம்ப எழுத்தாகக் கொண்டு அமையும் ஒரு திரைப்படத்தில் இருந்து வருகின்றது.

ஜீவனோடு கேட்டால் பாடல் எதுவென்று தெரியும் 😉

பாடலோடு வருக.

இன்னருள் தரும் அன்னபூரணி – ஆத்மா

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 385 என்றென்றும் SPB

நம் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குழுவினரோடு நடத்தும் ஒரு இசைப் பேரிகை.

இந்தப் பாடல் எதுவென்பதை குழுவினரே தம் பாஷையில் சொல்லிவிட்டதால் பதிலோடு வருக.


மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு – எனக்குள் ஒருவன்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 384 ஊஞ்சலாடி

இன்றைய பாடலைக் கேட்கும் போது பழசி ராஜாவில் வந்த சித்ரா பாடும் “குன்னத்தே” பாடல் போன்ற உணர்வில் இருக்கும். இந்தப் பாடல் கூட சித்ரா பாடியது.

அரசியலைக் களமாக வைத்து அதகளமாக இயக்கி வந்த இயக்குநரின் படம், மலையாள நடிகர் தான் நாயகன்.

கொட்டு(ம்)மேளங்கள் எந்தன் நெஞ்சில் கேட்கும் – மக்களாட்சி

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 383 தூது விட்டு

ஶ்ரீ வர்த்தினி குழுவினர் பழநி பாரதி அவர்களின் வரிகளில் பாடும் பாடும் ஆசையைக் காத்துல பாடலின் மீள் வடிவம். ஆகவே பாடல் வரிகளைக் கவனமாகக் கொடுங்கள்.

ஈராயிங்களில் வெளிவந்த ஒரு படத்தில் இருந்து இந்தப் பாடல். தெலுங்கில் பிரபல நடிகர் ஒருவரின் மகள் தயாரித்து பின்னர் தமிழிலும் மொழி மாற்றம் கண்ட படம்.

ராத்திரி நேரத்து பாட்டு – மறந்தேன் மன்னித்தேன்

Posted in Uncategorized | 28 Comments