Monthly Archives: August 2021

#RajaChorusQuiz 32 நாயனம் பாடுது

கங்கை அமரன் வரிகளில் ஒரு குடும்பத்தனமான பாட்டு. இந்தப் பாடலில் இடம் பெறும் கோரஸ் பகுதியைப் பாட்டின் அழகியலில் தன் அப்பன், ஆத்தாவுக்குச் சுட்டிப் பையன் வேடிக்கையாகத் திருமணம் செய்வது போலக் காட்சியமைப்பில் பொருத்திக் காட்டியிருப்பார் இயக்குநர் மனோபாலா. எஸ்.ஜானகியோடு சேர்ந்து பாடும் மென் குரல் ஆண் பாடகர் மைனர்த்தனமான நாயகனுக்கான குரலாக. மனசுக்குள்ள நாயனச்சத்தம் … Continue reading

Posted in Uncategorized | 50 Comments

#RajaChorusQuiz 31 எங்க ஊரு மாட்டுக்காரன்

பாடலைப் பாடியவரே படத்தின் நாயகனாகவும் திரையில் அபிநயித்திருப்பதால் பாடகர் பற்றிய உப துணுக்குத் தேவையாக இருக்காது தானே? கவிஞர் வாலி எழுதிய பாட்டு. கோழிக் கூட்டத்துக்கும், வாத்துக் கூட்டத்துக்கும் கூட கோரஸா அட ராமா ராமா 🙂 சொன்னப்படி கேளு – சிங்கார வேலன்

Posted in Uncategorized | 45 Comments

#RajaChorusQuiz 30 பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் நினைவில்

இன்று பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களது நினைவு நாளில் அவருடைய வரிகள் பூத்த ஒரு பாடல். இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் பி.சுசீலா குழுவினருடன் பாடுகின்றார்கள். மாறு வேடம் போட்டு ஆடுகின்ற கிராமத்தான் பாட்டு. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படம் வேறு. கூட நடித்தவர் இரண்டெழுத்து நாயகி. துள்ளிசைப் பாட்டுக்கு வலுச்சேர்க்கும் கோரஸ் … Continue reading

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 29 பூக்கள் வெண்பாக்கள் பாடாதோ

சின்னக் குயில் சித்ரா கூட இணைந்து குமரிக் கூட்டத்தோடு பாடும் பாட்டு. பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். பூவான இந்தப் படத் தலைப்பில் ஜேசுதாஸின் இன்னொரு படப் பாடல் ஒன்றும் தொடங்கும். வண்ணப் பூங்காவனம் சின்ன பிருந்தாவனம்- ஈரமான ரோஜாவே

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 28 மேகம் போகும் தூது

கவிஞர் வாலியார் வரிகளில் ஒரு இனிய காதல் பாட்டு இன்றைய நாளில். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடும் இந்த இன்னிசைப் பாடலின் தாளக் கட்டு மிகக் கடினமான வழுக்குப் பாறை. இளையராஜா தொடக்கி வைக்க பின்னணிக் குரல்கள் கையப்படுத்தி ஆலாபனை வழங்கி அப்படியே பாடக ஜோடிகளிடம் கொடுக்கும் அற்புத ஆலாபனை. ப வரிசைப் படங்களை எடுத்த … Continue reading

Posted in Uncategorized | 36 Comments